Monday, June 21, 2010

மதிமுகமோ?

இலைகளுக்கிடையில்  இன்னமுதாய் 
என்றும் நீயோ தென்படவே 
மலைகளுக்கிடையே மாயமதாய் 
இன்றோ நீ மறைந்ததேனோ?


காரிருள் அதுவோ படர்ந்திடவே 
காத்திருந்தேன் நானும் தான்!
தவழ்ந்து வந்த வெண்மதியே  - இன்று 
வெந்தழல் போன்ற காட்சி ஏனோ ?


கூவி அழைத்தேன் - தோழா நீ
குவிந்த அழகினைக் கண்டாயோ 
மதியின் முகத் தோற்றத்திலே!
அன்றி , விரைந்து அதனைக் கண்டிடுவாய்!


தேடுதல் வேட்டை துவங்கிடவே 
தேக்கமுற்ற வெண்மதியே - நீ 
தோழனைக் கண்டு  நாணமுற்றே
கருமுகிலில் புகுந்து கொண்டாயோ?


எண்ணிப் பார்த்தேன் சில நொடிகள் 
விந்தையூட்டும்  வெண்மதியே  மறைந்தாலும்  நீ 
நிறைந்தாயே எந்தன் சிந்தையிலே ! - இனி
மறைந்தாலும் தேய்ந்தாலும் கண்டிடுவேன் - உன்னை
மதியே எந்தன் மதியாலே !!!

No comments:

Post a Comment