Saturday, June 19, 2010

தேடுகிறேன் என்னை !

அன்றோ  நானோ   சிறுபிள்ளை  
அன்னை அவளோ வசமிருக்க 
அள்ளிச் சூட்டினேன் முத்துச்சிரிப்பை
அளவில்லா அவள் அன்பினிலே !

தாயே  உலகின் வாழ்வதுவாய் 
தங்கித் திரிந்த எனக்கே தான்  
தோன்றியதங்கே புது உறவு 
தோழன் என்ற பெயராலே !


துள்ளித் திரிந்த காலமதை 
சொல்லில் சொல்லல் அரிதன்றோ 
கருவில் வேற்றுமை என்றாலும் 
கருத்தில் ஒன்றெனத் திகழ்ந்தோமே !


மாற்றம் கண்டிட வந்ததுவே 
மணவாழ்க்கை என்ற சிட்டொன்று ! 
மருண்டு நானும் நோக்கிடவே 
மலைக்க வைத்தன இன்னல்கள் !


மழலைக் குரலதுவோதான் 
மகிழ்ச்சி மழையைப் பொழிந்திடவே 
மண்ணில் உறையும் வாழ்வதுவோ 
பொன்னாய் மின்னுவது யாங்ஙனமோ ?


கடந்து சென்ற தருணங்கள் 
உடன்வர மறுத்தது  ஏனென்றே 
வியந்து  நோக்கிய மறுகணமே 
வயோதிகம் வந்தது வாசலிலே !


மனித வாழ்க்கை அதுதனிலே 
இனிதே கண்ட நிகழ்வுகளில் 
தொலைந்து போன உறவுகளில் - மீண்டும் 
தேடுகிறேன் என்னை நான் !!!

No comments:

Post a Comment