Saturday, June 19, 2010

காணக் கிடைப்பின் .....

தமிழ்மயமாதல்  கண்டீரோ 
திரைப்படங்கள்  தொடங்கி  தெருக்கள் வரை !
தேரிய  வழிகள்  பலவிருக்க 
தோன்றி யனவோ இவைதாமோ ??


மாறிவரும்  நிலையனைத்தும்  மாநாட்டிற்கா  - அன்றி 
மங்கி  வரும்  தமிழதனை  வளர்ப்பதற்கா ?
செயற்கரிய  செயலதுவோ  செய்திடவே 
செம்மொழியாம் தமிழங்கே  தழைத்திடுமோ ?? 


பிறநாட்டார்  போற்றிப் பணிந்திடவே
பறக்குது  தமிழ்க்கொடி  உயரத்திலே !
உள்நாட்டார்  இதனை  உணர்ந்திடவே
உந்துதல்  தேவையோ  சிந்திப்பீர் !!


பாடல் பாடிப் பயனில்லை - தமிழில் 
பகரும்  சொல்லே  போதுமானது ! 
பேசிப் பழ(க்)குக  தமிழதனை - என்றுமது 
பாரில் நின்றிடும் தன்னாலே !!


சங்கம்  கண்ட  தமிழதுவோ  செழித்திடவே
எங்கும்  கேட்கச்  செய்க  தமிழ்  முழக்கம் ! 
பொங்கி  வரும்  அத்தருணம்  காணக்  கிடைக்க
ஏங்கிக்  காத்திருக்கும்  தமிழரில்  ஒருத்தி !!!

No comments:

Post a Comment