வட்ட வட்ட முகம்தனிலே
வாரிச் சுருட்டிய முத்துச் சிரிப்போ
விண்மீன் கூட்டத்தின் ஒருங்கிணைப்பு !
வண்ண வண்ண உடையினிலே
விண்ணில் உலா வருகின்றாய் !
வாங்கிக் கொடுத்தவர் யாரென்று
வாய் திறந்து பேசாயோ ?
அனைத்தும் நிறைந்த உன்னில் தான்
ஆதவன் வந்து திலகமிட்டான் !
பறவைகள் பறந்திடும் சாலையோ - நீ
பகலவன் உறங்கிடும் படுக்கையோ ?
ஆதி அந்தம் கண்டிடவே
அனுதினமும் முயன்றிட்டோம் !
அன்பர்களுக்கு உதவிடவே
ஆதவனும் வந்தானோ ?
எட்டித் தொட முயன்றிடவே
பட்டுப் பூச்சியாய்ப் பறக்கின்றாய் !
கரிய மேகம் கொண்டு நீயும்
மாரியைத் தானிங்கு பொழிந்தாயோ ?
சினம் கொண்டு நீயும் தான்
சீறிப் பாய்ந்து வந்தாலே
சுற்றித் திரியும் எம்போன்றோர்
சீவிக்கத் தானிங்கு இயன்றிடுமோ ?
No comments:
Post a Comment