Sunday, October 30, 2011

கலியுகக் காதல்!

சிவப்பு மஞ்சள் பச்சையென்று
சிலிர்க்க வைக்கும் நிறங்களிலே
நிலைத்து நிற்கிறாய் கண்முன்னே -எப்பொழுதும்
நினைவில் நிற்கிறாய் ஏன் கண்ணே?
கண்ணைக் கவரும் அழகில்லை - அட!
கண்ணிமைக்க மறக்கிறேன் உனைக்கண்டே!!!
வாராய் என்று நன்கறிந்தும்
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்
உனக்காக என்றும் எனை மாற்றி
உள்ளம்தனில் காத்திருப்பின் இலக்கணம் கூறி!
படிக்கிறேன் பலவாறு தினம்தினமே
பகடைக்காயாய் சுழற்றும் உன்
மௌன உச்சரிப்புகளுக்கு உரு கொடுக்க,
மெல்ல மெல்ல உயிர் கொடுக்க!
பசியும் தூக்கமும் பிறிதாயிற்றே!
பாசமும் நட்பும் வேறாயிற்றே!
இது போல் இல்லை நான் முன்னே
இனி இன்பமும் துன்பமும் நீயானாய்!

காதல் போலத் தோற்றுகிறதோ??? - ஆம்!
கலியுகக் காதல் இதன் பெயராம்!
மென்பொருள் துறையில் முக்கியமாய்
மனிதனை இயந்திரம் ஆ(க்கி)ட்கொள்ளும்
கணிப்பொறிக் காதல் -  இஃது
காலம் காலமாய் ஒருதலையாக!!!