Tuesday, September 13, 2011

இன்றையநிலையில் நான்...

வெட்கித் தலைக்குனிவேனென்று 
விருப்பமில்லாவொன்றில்
விருட்டென்று விரைந்த நான் 
விடியல் பொழுது ஒவ்வொன்றிலும் 
விழிப்புணர்வு கொண்டு விசும்புகிறேன்...
வெறுப்புகளின் பிடியில் விருப்புகளைத் தேடி..!
மாறிப்போன என்னிலும் 
மரத்துப்போன மனத்திலும் 
உருமாறிப்போன என்...
விருப்பங்களே!!!
மன்னித்துவிடுங்கள்...!
துறவியாகிவிட்டேன் நான்!!!


Saturday, September 3, 2011

பாரியோ நீ மாரியே....!

முதல் துளி விழுந்ததும்
மூலை முடுக்குகளில் சிலர்...
மேலும் தொடர்கிறாய் விடாமல்
மல்கிய குரலோடு உன் அழுகையை...
ஊர்வலம் போகிறது ஆங்கே
உன்னை எதிர்த்து கறுப்புக் கொடி ஏந்தி!
யாருடைய ஆறுதலுக்காக
யாசித்து நிற்கிறாய் என்று புரியவில்லை!

காற்றும் மேகமும் உறுதுணையாய்க்
காவந்து செய்து உன் துயர் நீக்கப் பாடுபட,
நீட்டிக்கிறாய் உன் பிடிவாதத்தை...
நீயும் மனிதனைப் போல் தானோ?
உன் கண்ணீரில் காலம் காலமாய்
உல்லாசமாய் உள்ளம் நனைக்கும்
வேண்டாத உறவுக்கும், தேறாத அன்புக்கும்
தேடித் தேடி அலைகிறாய் ஏனோ?