Thursday, January 26, 2012

'புயல்'விழி 'தானே'!!??

சுட்டிச் சுழற்றும் உன் விழிச்சுழலில் சற்றே
எட்டிப் பார்க்கும் அளவிலா அழகைக்
கண்டு ரசித்த குற்றமோ??? - அண்டையில்
ஆண்டும் ஈண்டும் சிதறிக் கிடந்த
பல்லுயிர், பல்பொருள் அனைத்தும்
சில்லாய்ச் சிரிக்கின்றன சிலநொடிகள்
உன் விழிச்சிறையில்....!!!
ஒப்புகிறேன் பலருக்கு நானும்...
தப்பிப் பிழைத்த காரணத்தால்...!
கடைக்கண்ணால் அன்றோ பார்க்கிறேன்
எடைக் கணக்கின்றி ஈர்க்கும் அந்த
காந்தக் கண்களை இன்றும்....!!!