Sunday, December 14, 2014

உன்னோடு நான் மட்டும்!

நீயும் நானும் இங்கே
நீண்ட நெடுஞ்சாலையில்
நகர்ந்து மெல்ல செல்லும்
நிழல் மட்டும் பின்தொடர

குளிர் காற்றும் கரு மேகங்களும்
கை குலுக்கி மகிழ்ந்தாட...
கண்டும் காணாதவாறு
கண்ணே உன்னுருவில் நான் மயங்க

அதோ அங்கே மலையின் சுனை வைரங்கள்
ஆங்காங்கே இருபுறமும் மின்னிட
அப்பொழுதில் ஆழ்ந்த அமைதியோடு
அன்பே உன் தோளில் சாய்ந்தபடி

என்றென்றும் உன்னோடு நான் மட்டும்!!!

பயண மயக்கம்!!

என்னுடன் அழைத்து வருகிறேன் 
எண்ணங்களின் எழுச்சிகளையும் 
எண்ணிலடங்கா உணர்ச்சிகளையும் 
எண்ணி எண்ணி தேக்கி வைத்த ஏக்கங்களையும்... 
எனக்காக என்றும் இருக்கும் உங்களுக்காக!
என் விழித்திரையில் முப்பரிமான வடிவில் 
எண்ணத்தில் வண்ணம் தீட்டி மெருகேற்றி 
எட்டிப்பிடித்து விண்ணில் திரையிட முன்னேறுகிறேன்...
என்றென்றும் இப்பயண நினைவுகளோடு!!
 

அம்மா!!!

கூட்டத்தில் புழுக்கத்துடன் நின்று கொண்டிருக்கும் பலருள் நிற்கவே சிரமப்பட்டு சோர்வுடன் நின்று கொண்டிருந்த  ஒரு பெண்மணியைப் பார்த்து பேருந்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது நிரம்பிய ஒருவர்: "நீங்க உட்காருங்கம்மா... பரவாயில்ல... நா இதோ இறங்கிடுவேன்!", என்று நகர்ந்து வழி விட, காற்றும் நுழைய முடியாத கூட்டத்திற்கு நடுவில் கூவி அழைக்கிறாள் அவள்... முன்புறம் நின்று கொண்டிருக்கும் 18 வயது நிரம்பிய தன்  மகனை..."தம்பீ!! உன்னால நிக்க முடியாது ராசா... வா இங்க வந்து உட்காரு!" 

Saturday, December 13, 2014

நில்! கவனி!! செல்!!!

சாலையில் மிதந்து செல்கையிலே
சத்தமிட்டு முத்தமிடும் உனக்கு
சற்றும் வெட்கம் இல்லையோ முன்னர் பலர் நிற்க?
செய்கை பாஷை தான் மறந்துவிட்டதோ!!
நினைவிருக்கட்டும் இது பொது இடம்!!!
நில்! கவனி!! செல்!!!