Sunday, December 14, 2014

அம்மா!!!

கூட்டத்தில் புழுக்கத்துடன் நின்று கொண்டிருக்கும் பலருள் நிற்கவே சிரமப்பட்டு சோர்வுடன் நின்று கொண்டிருந்த  ஒரு பெண்மணியைப் பார்த்து பேருந்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது நிரம்பிய ஒருவர்: "நீங்க உட்காருங்கம்மா... பரவாயில்ல... நா இதோ இறங்கிடுவேன்!", என்று நகர்ந்து வழி விட, காற்றும் நுழைய முடியாத கூட்டத்திற்கு நடுவில் கூவி அழைக்கிறாள் அவள்... முன்புறம் நின்று கொண்டிருக்கும் 18 வயது நிரம்பிய தன்  மகனை..."தம்பீ!! உன்னால நிக்க முடியாது ராசா... வா இங்க வந்து உட்காரு!" 

No comments:

Post a Comment