Saturday, January 17, 2015

நீ வேண்டும் என நான்...

பனியாய்ப்  படர்ந்து நின்றேன் - உன்னைப்
பார்த்த நொடியில் உருகி உவக்க
இமையாய் இயங்கி வந்தேன் - என்றும்
ஈரொரு கணமும் விலகாதிருக்க
நிழலாய்த் தொடர்ந்து வந்தேன்  - உன்னை
நீண்ட நெடுந்தூரம் துணையாய்த் தொடர
காற்றாய் கரைந்து நின்றேன் - என்
கண்ணின் ஈரம் தனை உணர வைக்க
நீ மட்டும் போதும் என்றேன் - வாழ்வில்
நிலையாய் உனக்கு நிகராய்க் கண்டிலேன் ஒருவரையும்!!!

முதுமை கசக்குதோ?

ஈன்றவள் இன்று உடல் இளைத்து
என்னைக் கண்டுகொள்ள யாருமில்லை
என்றாங்கே ஈன ஸ்வரத்தில்
எதிர்நின்று அழுகுரல் எழுப்பி
வருந்துங்கால்... வாராயோ
என் செல்ல பிள்ளாய் - கேளாயோ
என்னவென்று அவள் வார்த்தைகளை
எட்டாக் கனி கேட்கவில்லை அவள் - நீ
எட்டிப் பார்க்க ஏங்குகிறாள்...
எடுத்து செல்வதில்லை யாரும்
எதனையும் என்றும் இப்பூவுலகில்...
முதுமையின் இலக்கணம் தெரியுமோ?
இன்று  அவளுக்கு; நாளை உனக்கு;
எனக்கும் தான் ஓர்நாள்...!!!

காத்திருந்த காதலி

நீ நான் மௌனம் இசை
இருள் குளிர் வெட்கம் ஊடல்
ஒரு துளி முத்தம் ...
அழகு நிலவே அலைகிறேன்
காதல் கொண்டு உன்னோடு!
காட்டிக்கொடுக்க யாருமில்லை
யவ்வன சுந்தரா பயந்து
பாய்ந்து மேகங்களில் ஒளியாதே
ஒரு போதும் கலங்கி மறையாதே
மறப்பெண் என் துணையோடு திரைகடல்
தாவி துள்ளிக்குதித்து உல்லாசமாய்
உடன் வருகிறாய் எனில் வா...
வேற்று கிரகம் தனில் சிட்டாய்
சென்று குடிபுகுவோம்...
கற்பனையில்லை!!!