Saturday, January 17, 2015

காத்திருந்த காதலி

நீ நான் மௌனம் இசை
இருள் குளிர் வெட்கம் ஊடல்
ஒரு துளி முத்தம் ...
அழகு நிலவே அலைகிறேன்
காதல் கொண்டு உன்னோடு!
காட்டிக்கொடுக்க யாருமில்லை
யவ்வன சுந்தரா பயந்து
பாய்ந்து மேகங்களில் ஒளியாதே
ஒரு போதும் கலங்கி மறையாதே
மறப்பெண் என் துணையோடு திரைகடல்
தாவி துள்ளிக்குதித்து உல்லாசமாய்
உடன் வருகிறாய் எனில் வா...
வேற்று கிரகம் தனில் சிட்டாய்
சென்று குடிபுகுவோம்...
கற்பனையில்லை!!!

No comments:

Post a Comment