Saturday, January 17, 2015

நீ வேண்டும் என நான்...

பனியாய்ப்  படர்ந்து நின்றேன் - உன்னைப்
பார்த்த நொடியில் உருகி உவக்க
இமையாய் இயங்கி வந்தேன் - என்றும்
ஈரொரு கணமும் விலகாதிருக்க
நிழலாய்த் தொடர்ந்து வந்தேன்  - உன்னை
நீண்ட நெடுந்தூரம் துணையாய்த் தொடர
காற்றாய் கரைந்து நின்றேன் - என்
கண்ணின் ஈரம் தனை உணர வைக்க
நீ மட்டும் போதும் என்றேன் - வாழ்வில்
நிலையாய் உனக்கு நிகராய்க் கண்டிலேன் ஒருவரையும்!!!

No comments:

Post a Comment