Saturday, January 17, 2015

முதுமை கசக்குதோ?

ஈன்றவள் இன்று உடல் இளைத்து
என்னைக் கண்டுகொள்ள யாருமில்லை
என்றாங்கே ஈன ஸ்வரத்தில்
எதிர்நின்று அழுகுரல் எழுப்பி
வருந்துங்கால்... வாராயோ
என் செல்ல பிள்ளாய் - கேளாயோ
என்னவென்று அவள் வார்த்தைகளை
எட்டாக் கனி கேட்கவில்லை அவள் - நீ
எட்டிப் பார்க்க ஏங்குகிறாள்...
எடுத்து செல்வதில்லை யாரும்
எதனையும் என்றும் இப்பூவுலகில்...
முதுமையின் இலக்கணம் தெரியுமோ?
இன்று  அவளுக்கு; நாளை உனக்கு;
எனக்கும் தான் ஓர்நாள்...!!!

No comments:

Post a Comment