Sunday, December 14, 2014

உன்னோடு நான் மட்டும்!

நீயும் நானும் இங்கே
நீண்ட நெடுஞ்சாலையில்
நகர்ந்து மெல்ல செல்லும்
நிழல் மட்டும் பின்தொடர

குளிர் காற்றும் கரு மேகங்களும்
கை குலுக்கி மகிழ்ந்தாட...
கண்டும் காணாதவாறு
கண்ணே உன்னுருவில் நான் மயங்க

அதோ அங்கே மலையின் சுனை வைரங்கள்
ஆங்காங்கே இருபுறமும் மின்னிட
அப்பொழுதில் ஆழ்ந்த அமைதியோடு
அன்பே உன் தோளில் சாய்ந்தபடி

என்றென்றும் உன்னோடு நான் மட்டும்!!!

No comments:

Post a Comment