Tuesday, September 13, 2011

இன்றையநிலையில் நான்...

வெட்கித் தலைக்குனிவேனென்று 
விருப்பமில்லாவொன்றில்
விருட்டென்று விரைந்த நான் 
விடியல் பொழுது ஒவ்வொன்றிலும் 
விழிப்புணர்வு கொண்டு விசும்புகிறேன்...
வெறுப்புகளின் பிடியில் விருப்புகளைத் தேடி..!
மாறிப்போன என்னிலும் 
மரத்துப்போன மனத்திலும் 
உருமாறிப்போன என்...
விருப்பங்களே!!!
மன்னித்துவிடுங்கள்...!
துறவியாகிவிட்டேன் நான்!!!


No comments:

Post a Comment