Sunday, June 20, 2010

வேறென்ன வேண்டும் ???

வெண்மதி அங்கோ அலைந்திடவே 
நிம்மதி தேடிய மனமொன்றே
நித்தமும் அழுகுரல் பரப்பிடவே 
சித்தமும் கவலை கொண்டதுவே !


கூக்குரல் தினம்தினம் ஒலித்திடவே 
யாரோ கள்வன் என்றே நான் 
திரும்பிப் பார்த்திட முயன்றிடவே 
சிக்கவில்லை எவரும்தன் !


தேடித் திரிந்தேன் யாரென்று 
ஓடிச் சென்று உதவிடவே 
நீர் யாரென்று வினவிடவே 
கண்ணீர் மல்கிய குரலொடு -


குமுறி அழுதது மனசாட்சி -
குலத்தில் உயர்ந்தோர் இல்லையே 
குழப்பம் கொள்வது எதனாலே ?
குடிமகன் நீயென்று உணர்ந்திட்டே 
குற்றம் தனை ஒழித்திடுவாய் !


கேட்டுத் தெளிந்த நானும் தான் 
வேறென்ன வேண்டும்  என்றிடவே -
வருந்திக் கூறியது மனசாட்சி :
வேண்டும் மனிதா மனிதத் தன்மை !!!

No comments:

Post a Comment