Saturday, June 19, 2010

நான்

தரத்தக்க  சொல்லதுவாம்  
நன்மை  தீமை  இவ்விரண்டை  !
தந்திரத்தால்  எதனையுமே  
சாதித்திடும்  அச்சொல்லே  !


சுயநலச்  செயலது  புரிந்திடவே  
சுற்றம்  யாவும்  மறுத்திடுமே
சுருங்கக்  கூறின்  அச்சொல்லோ 
சுதந்திர  வாழ்க்கை  தேடுவதே !


தனிச்செயல்  ஏதும்  காண்பதற்கே  
தனிமை  அடைந்திடும்  அடைமொழியே  !
தகுதி  தரமோ  கருதாதே  
தானென்றிருக்கும்  திறனுடைத்தே  !


ஈற்றில் மாற்றம்  நிகழ்ந்தாலே
பற்றும்  அதுவோ  பெருகிடுமே  !
மற்றும்  இன்னோர்  சிறப்புண்டாம்
நாற்றிசை  என்றும்  துணையுண்டாம் !

நானோ  நாமாய்த்  திரிந்திடவே
நாளைய  உலகம்  மேம்படுமே  !
நமக்கேன்  என்று  நகர்ந்தாலே
நன்மை  காண்பது  அறிதேயாம் !!!  

No comments:

Post a Comment