தரத்தக்க சொல்லதுவாம்
நன்மை தீமை இவ்விரண்டை !
தந்திரத்தால் எதனையுமே
சாதித்திடும் அச்சொல்லே !
சுயநலச் செயலது புரிந்திடவே
சுற்றம் யாவும் மறுத்திடுமே
சுருங்கக் கூறின் அச்சொல்லோ
சுதந்திர வாழ்க்கை தேடுவதே !
தனிச்செயல் ஏதும் காண்பதற்கே
தனிமை அடைந்திடும் அடைமொழியே !
தகுதி தரமோ கருதாதே
தானென்றிருக்கும் திறனுடைத்தே !
ஈற்றில் மாற்றம் நிகழ்ந்தாலே
பற்றும் அதுவோ பெருகிடுமே !
மற்றும் இன்னோர் சிறப்புண்டாம்
நாற்றிசை என்றும் துணையுண்டாம் !
நானோ நாமாய்த் திரிந்திடவே
நாளைய உலகம் மேம்படுமே !
நமக்கேன் என்று நகர்ந்தாலே
நன்மை காண்பது அறிதேயாம் !!!
நன்மை தீமை இவ்விரண்டை !
தந்திரத்தால் எதனையுமே
சாதித்திடும் அச்சொல்லே !
சுயநலச் செயலது புரிந்திடவே
சுற்றம் யாவும் மறுத்திடுமே
சுருங்கக் கூறின் அச்சொல்லோ
சுதந்திர வாழ்க்கை தேடுவதே !
தனிச்செயல் ஏதும் காண்பதற்கே
தனிமை அடைந்திடும் அடைமொழியே !
தகுதி தரமோ கருதாதே
தானென்றிருக்கும் திறனுடைத்தே !
ஈற்றில் மாற்றம் நிகழ்ந்தாலே
பற்றும் அதுவோ பெருகிடுமே !
மற்றும் இன்னோர் சிறப்புண்டாம்
நாற்றிசை என்றும் துணையுண்டாம் !
நானோ நாமாய்த் திரிந்திடவே
நாளைய உலகம் மேம்படுமே !
நமக்கேன் என்று நகர்ந்தாலே
நன்மை காண்பது அறிதேயாம் !!!
No comments:
Post a Comment