சிக்கல் நிறைந்த உலகந்தனயே
சீறிப் பாய்ந்து சீர்ப்படுத்த - நானும்
சிங்கார நடையுடனே
சிட்டாய்ப் பறந்து வந்தேனோ ?
பாதம் பதித்த நாள்முதலே
பாங்காய் என்னை வளர்த்திட்டு
பாசந்தனை பொழிந்திட்டு
பாரில் நானும் வென்றிடவே
பாதை காட்டும் நற்றாயை
பார்த்திடத் தானிங்கு வந்தேனோ ?
நன்மை தீமை அறியேனே - நான்
நானிலம் காக்க வேண்டுமன்றோ ?
நிலையாய் நிற்பன எதுவென்று
நினைத்து முடித்த மறுநொடியே
நிலைக்கவில்லை எதுவும்தான் !!
விடியல் காண வந்தேனே - தாய்
மடியில் சாய்ந்து சிந்தித்தேன் !!!
மாற்றம் பற்பல வேண்டுமே - என்றும்
சீற்றம் கொண்டு செயல்படவே !!!
தேடித் திரிந்தேன் துணையொன்றை
ஓடிச் சென்று ஒளிந்ததேனோ ?
வாடிப் போனேன் இது கண்டே
கடிந்து கொண்டேன் உள்ளந்தனிலே !!
இன்றுபோல் என்றும் தான்
இன்பமாய் வாழ்ந்திடவே - நானும்
சுட்டிப் பயலாய்த் திரிந்திடவே
எட்டிப் பார்த்தேன் உலகினிலே !!!
நிழலோ நிஜமாய் மாறிடவே ....
என்
நிழலுக்கு நிஜம் தேடுவேனோ ?
நிஜத்திற்கு நகல் ஆவேனோ ?
சீறிப் பாய்ந்து சீர்ப்படுத்த - நானும்
சிங்கார நடையுடனே
சிட்டாய்ப் பறந்து வந்தேனோ ?
பாதம் பதித்த நாள்முதலே
பாங்காய் என்னை வளர்த்திட்டு
பாசந்தனை பொழிந்திட்டு
பாரில் நானும் வென்றிடவே
பாதை காட்டும் நற்றாயை
பார்த்திடத் தானிங்கு வந்தேனோ ?
நன்மை தீமை அறியேனே - நான்
நானிலம் காக்க வேண்டுமன்றோ ?
நிலையாய் நிற்பன எதுவென்று
நினைத்து முடித்த மறுநொடியே
நிலைக்கவில்லை எதுவும்தான் !!
விடியல் காண வந்தேனே - தாய்
மடியில் சாய்ந்து சிந்தித்தேன் !!!
மாற்றம் பற்பல வேண்டுமே - என்றும்
சீற்றம் கொண்டு செயல்படவே !!!
தேடித் திரிந்தேன் துணையொன்றை
ஓடிச் சென்று ஒளிந்ததேனோ ?
வாடிப் போனேன் இது கண்டே
கடிந்து கொண்டேன் உள்ளந்தனிலே !!
இன்றுபோல் என்றும் தான்
இன்பமாய் வாழ்ந்திடவே - நானும்
சுட்டிப் பயலாய்த் திரிந்திடவே
எட்டிப் பார்த்தேன் உலகினிலே !!!
நிழலோ நிஜமாய் மாறிடவே ....
என்
நிழலுக்கு நிஜம் தேடுவேனோ ?
நிஜத்திற்கு நகல் ஆவேனோ ?
No comments:
Post a Comment