Saturday, June 19, 2010

காலம்

நடக்கும்  என்று  நினைத்ததுவோ 
நடந்து  முடிந்த  பின்னாலே 
கடந்து   சென்று  பார்க்க  வைக்கும்  
காலமெனும்  கண்ணாடி !


நல்லது  தீயது  ஈதென்று  
உள்ளது  போன்றே  எடுத்துரைக்க ;
சொல்லது  செயலாய்த்  திரிந்திடவே
நல்வழி  காட்டும்  வழிகாட்டி  !
 
மாற்றம்  பல  நிகழ்ந்தாலும்
தோற்றம்  அதுவும்  மாறாமலே 
சுற்றம்  தனை  மறந்தாலும் 
சற்றும்  அதனைப்  பாராதே !! 

No comments:

Post a Comment