Thursday, September 2, 2010

இறுதியின் தொடக்கம்

உணர்ச்சிப் பெருக்கைத் தூண்டிடவே
ஊர்ந்து வரும் எதிர்காலமே -
தொலைவில் இல்லை நீ !!!
தொடர்ந்தாட்கொள்ளும் எண்ணங்களில்
ஆங்கே எங்கோ ஓரிடத்தில் பற்பல மனங்கள்
ஆர்ப்பரித்து  நிற்பது உனக்குத் தெரிகிறதா ?
ஆம்! வரவேற்றோம் உன்னை நாங்கள் -
ஆனந்தம் காண்போமென்று அறியாமலே !
உணர்த்திவிட்டாய் நீயதனை எங்களுக்கே  - பின்
 உரிமையதனைப்  பறிப்பதுவும் முறைதானோ ?
பயின்றோம் , கற்றோம் வாழ்வதனை
பல சூழலில் என்றும் கடைப்பிடித்தோம் !
நட்பின்  ஆழம் அறிந்திடவும் - அதில்
நன்றாய் மூழ்கித் திளைத்திடவும்
நண்பர் கூட்டம் வளர்ந்ததுவே!
நாளும் அதுவோ மேம்படவே
நாளை இறுதி என்றாயே -
நியாயம் கருதிப் பகர்வாயோ??
விட்டுப் பிரிய மனமில்லை
தொட்டுத் தொடரும் என்றறிந்தும் !

இறுதியின் தொடக்கம் துவங்கிடவே
இன்பம் அதுவோ விலகியதே !
மனமே நீயும் பதறாதே
மாற்றம் கண்டு கலங்காதே !
மானுட வாழ்க்கை என்பதனில்   
மாறும் நிலைதான் உண்டல்லவோ?
பருவம் இதுவோ கல்லூரியிலே
பின்னும் தொடரும் நீ நினைத்தால் !
மறவற்க இதனை மனம்கொண்டே
மாண்டாலும் நீங்காதே இந்நட்பே !!!

No comments:

Post a Comment