Thursday, September 2, 2010

அவளுக்கென்று ஒரு பாடல் ...

ஆற்றல் கொண்ட உலகனைத்தும் 
போற்றிப் பாடிட முன்வருமோர் 
ஒப்பிலா உன்னதப் படைப்பவளே
எப்பொழுதும் இப்பாரில்!!!
உருகும் உள்ளம் அதுகொண்டே 
உறுதியுடன் என்றும் இருந்து 
இறுதிவரையில் வென்றிடவே 
உறுதுணையாய் ஊக்கமளித்தாய் !
எண்ணிலடங்கா பணியாவும் 
கண்ணிமைக்கும் நொடியினிலே 
துணிந்து என்றும் செயலாற்ற 
துடிப்பாய் நின்று செயல்பட்டாய் !
பதித்த தடங்கள் ஒவ்வொன்றும் 
உதித்ததுவோ உன் தயவாலே 
மதிக்க வேண்டிய உள்ளங்கள் 
மாறிப் போனதன் மாயமென்ன ?
என்னுள் மூழ்கிய எனக்கே தான் 
எழுச்சியூட்டிய புத்தொளியே 
எளிமையின் சிகரம் உனக்காக 
என்னால் இயன்ற பாடலொன்று !!!

No comments:

Post a Comment