Tuesday, July 26, 2011

காதல் தோல்வி!



காண விழைந்து ஓடோடி வந்தேன்
காலணி கூட அணியாமல்!
காத்திருக்கிறாய் எனக்கோ என்று!!!

என்னைக் காண ஒருபோதும் நீ
என் இருப்பிடம் தேடி வராமலிருந்தும்
கோபமில்லை உன்மேல் எனக்கு!!!

திரண்டு வந்து மெதுவாய்
திருடிச் சென்றாய் என்மனதை
திருப்பிக் கேட்கவும் மனமில்லை எனக்கு!!!

தீண்டிச் செல்லும் ஒவ்வொரு முறையும்
துள்ளிக் குதித்தேன் குதூகலத்தில்
என்னை மட்டும் தொடர்கிறாய் என்று!!!

சுவடுகள் பதித்துத் திரும்பிப் பார்த்தேன்
சுறுசுறுப்பாய்ப் பின்தொடர்ந்தாய்!
நான் என்றால் அவ்வளவு ஆசையா உனக்கு???

உன்னில் கலந்து உவகையில் மிதக்கயில்
உணர்ந்தேன் தற்செயலாய் அப்பொழுது
ஓராயிரம் காதலர்களா உனக்கு??? 

No comments:

Post a Comment