Friday, July 22, 2011

திருமண மலர்கள்!

சொல்லாமல் வந்த திசையிலே
சொல்லித் தந்த வார்த்தைகளை
செவி கொடுத்துத்தான் கேட்டேனே
செல்லும் இடமெல்லாம் செல்லமாய்...

அருகிலென்றாலும் உன்னைவிட்டு
அகல என்றும் நினைத்ததில்லை....
அந்நாள் இந்நாள் என்று இன்று என்  
அகம் கூற உணர்கிறேன்...

என்னைக் காக்கும் முயற்சியில்
என்றென்றும் நீயிருக்க,
எதிர்ப்பார்ப்புகளோடு எதிர்ப்பாராவிதமாய்
எடுத்துச் செல்கிறார்கள் என்னை!

நியதி இதுவென்று நினைத்தாலும்
நியாயம் தானா சொல்லிவிடு?
நீடூழி வாழ்க என்றாலும் - உன் 
நினைவுகளின்றி வாழ்வதெங்கே??
வாடுகிறேன்!!!!

2 comments:

  1. அந்த நாள் இந்த நாள் என்று என்
    அகம் கூற உணர்கின்றேன்...
    எதிர்பார்புகளோடு எதிர்பாராதவிதமாய்
    எடுத்துச் செல்கிறார்கள் என்னை...
    அழகான அந்தச் சூழலை
    கண்முன் காட்சியாக நிறுத்திப்போகும் வரிகள்
    இந்தக் கவிதையைப் படித்தவுடன்
    "வாராயோ என் தோழி வாராயோ....
    பாடல் காட்சிகள் நினைவில் வந்து போனது
    அருமையான் அபதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா!!

    ReplyDelete