Monday, June 13, 2011

அந்த என் நாட்கள்...

கண்ணயர்ந்து சாய்கிறேன் - இன்று  
கடும்பணியின் பிடிப்பின் இடையில்!
எதற்காக இவ்வாறு.......???????
எனக்குள் எழுந்த கேள்விக்கு 
ஒரு பொருட் பன்மொழியாய் 
ஓராயிரம் வார்த்தைகள்!!!
திரும்பிப் பார்க்கிறேன் இப்போது
திரும்பத் திரும்பப் பார்க்கிறேன்...
சிட்டாய்த் திரிந்து, சிரித்து மகிழ்ந்த நாட்கள் என 
சுட்டுகிறது என் கைவிரல் அவற்றை!
சுமைகள் இவை, சுவைகள் இவை என
சூட்சமமாய்க் காலம் காட்டி எதிர் நிற்க 
நினைவு கூர்ந்து நகைக்கிறேன் - ஒரு கணம் 
நில்லாமல் ஓடிய அந்நாட்களை!!!
அதெல்லாம் ஒரு காலம் - என்று
அகத்தால் உரைக்க இதோ, என் முன்னரும்
அரியவகை அனுபவங்கள் அணிவகுப்பில்!!!
ஆழ்ந்த பெருமூச்சுடன் ............
ஒட்டிப் பார்க்க முயல்கிறேன் 
ஓட்டம் பிடித்த "அந்த என் நாட்களை" !!! 


2 comments:

  1. சலிப்பை ஓட்ட நீங்கள் சொல்லும் இந்த
    உபாயமும் சிறப்பாகத்தான் உள்ளது
    சுமைகளுடன் சுவைகளை
    இணைத்துப் பார்த்தால் சுமை குறையவும்
    காலப்போகில் மறையவும் நிச்சயம் உதவும்
    நல்ல பதிவுதொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete