Saturday, May 28, 2011

தமிழ்த் திருட்டு!

அதிகார தோரணையில் பொற் சிலம்பும்,
அலங்கார மணிகளோடு மேகலையும்,
அளவிலா மதிப்புடைய சிந்தாமணியும்,
அடுக்கிய வண்ண வளையல்களும்,
அழகாய் அசைந்தாடும் குண்டலமும்,
அன்று அணிந்து அன்ன நடையிட்ட வீதியிலே
ஆளையே காணோம் இன்று???
அட! விலைவாசி உயர்வால் உன்னையும்
ஆட்கொண்டுவிட்டதோ கள்வர் பயம்?
அன்றி அண்டை நாட்டைப் பார்த்து
அலைகிறாயோ நீயும் கலாச்சார மாற்றத்திற்கு?
அடிக்கடி கண்டு தான் வருகிறேன் உன் போக்கை!
ஆதி முதல் அந்தம் வரையிலாக!
ஆதிக்கத்தின் ஆழம் கண்டுகொள்ளும் முயற்சியில்
அண்மையில் தந்துள்ளேன் புகார்- நகரிலே
அடக்கவேண்டி இத்தமிழ்த் திருட்டை!!!
அன்பான இளைஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அகப்பட்டால் இதனை ஒப்படையுங்கள் 
அதன் இருப்பிடத்திற்கு! - அகந்தையால் 
அநாதையாக்கி ஒதுக்கி விடாதீர்கள் இதனை ஒருகாலும்!!!

4 comments:

  1. Nice one de.. :)

    ReplyDelete
  2. மிக்க நன்றி நந்தினி :) :)

    ReplyDelete
  3. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_03.html

    ReplyDelete
  4. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி தம்பி கூர்மதியன் அவர்களே!! :) :)

    ReplyDelete