Friday, November 12, 2010

எண்ணங்கள் ஓராயிரம்....

ஆயத்தம் கொண்டேன் தந்தையே நான் 
அகிலமெங்கும் உன் புகழுரைக்க !
ஆட்கொண்டாய் என்னைப் பல விதமாய் 
அன்றாடம் என் வாழ்வதிலே !

எண்ணிப் பார்க்கிறேன் நானும் தான் 
பண்ணிய பணிகள் ஒவ்வொன்றும் !
சித்தமோ சிறப்பாய்த் தேடிடவே 
நித்தமும் அதுவோ தொடர்ந்திடுதே !


வேதனை அதனை உணர்த்திடவே - அதில் 
சாதனை கண்டிட ஊக்கமிளித்தாய் !
வேறென்ன வேண்டும் என்றாங்கே 
சர்வமும் கொண்டு பின்தொடர்ந்தாய் !


வார்த்தைகளில்லை என்னிடமே 
கோர்வையாய் என்றும் எடுத்துரைக்க !
ஏட்டில் எழுதிட முயன்றிட்டேன் - அது சிறு 
கூட்டில் அடைத்தல் போலன்றோ ?


தேடுகிறேன் இன்றும் நான் 
தரணியில் உள்ள திசைதோறும்...
வழியதுவோ யாதென்று
வணங்கி உன்னை வழிபடவே !!!


எண்ணங்கள் அவையோ பலவிருக்க 
என் சிந்தனை ஏட்டில் திரட்டியதனை 
மறவாமல் ஓர்நாள் வெளிக்கொணர்ந்தே 
மறைவேன் இம்மண்ணிலே !!!

No comments:

Post a Comment