Saturday, March 26, 2011

தொலைந்து விட்ட நான் .....

உலகமெங்கும் உன்னதம் பெறுகிறேன்!
உல்லாசமாக உலா வருகிறேன்!
உயிராய் உணர்வாய்த் திகழ்ந்தேன் அன்று
உருவின்றி விட்டாய் என்னை நீயோ இன்று!
தன்னிகரில்லாதவள் என்று பலருரைக்க- நானோ 
தனிமைப் படுத்தப் பட்டதேனோ இவ்விடத்தே??
மனிதா!! மன்றாடுகிறேன்!!
பரப்பக் கேட்கவில்லை என்னை நான் 
பகரக் கேட்கிறேன் உந்தன் நாவால் அனுதினமும்!
தமிழ் எந்தன் பெயர்- மீண்டும் 
தழைக்கச் செய்வாய் என்னை உந்தன் மண்ணிலே
தலைசிறக்கச் செய்கிறேன் உன்னை விண்ணிலும்!

2 comments:

  1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!! :)

    ReplyDelete