Saturday, June 18, 2011

விடைபெற...

சிக்கித் தவிக்கிறேன் அனுதினமும்- பள்ளிச்
சீருடை அணியும் இவ்வயதில்.................!
பயில்கிறேன் நானோ பல விதமாய்
பணத்தின் பிடிதான் உயர்ந்ததென்று!
ஏழ்மை நிலை எனை வாட்ட,
ஏங்கிப் பார்க்கிறேன் கனவுகளில் கல்வியை!!
தேவைகளும் ஆசைகளும் எதிரெதிரே வீற்றிருக்க;
தேங்கிக் கிடக்கும் கவலையிலும்
ததும்ப நிற்கும் கண்ணீரிலும்
திக்கு தெரியாமல் தேடுகிறேன்...
தீவிரமாகத்தான் ... கல்வியை இல்லை...
தினக்கூலிக்கு "ஆள் தேவை" என்ற பலகையை!
சுமை தூக்கித் தருகிறேன்...பணம் வேண்டாம்
சற்று என் மனச் சுமை இறக்கித் தருவீரோ???

Monday, June 13, 2011

அந்த என் நாட்கள்...

கண்ணயர்ந்து சாய்கிறேன் - இன்று  
கடும்பணியின் பிடிப்பின் இடையில்!
எதற்காக இவ்வாறு.......???????
எனக்குள் எழுந்த கேள்விக்கு 
ஒரு பொருட் பன்மொழியாய் 
ஓராயிரம் வார்த்தைகள்!!!
திரும்பிப் பார்க்கிறேன் இப்போது
திரும்பத் திரும்பப் பார்க்கிறேன்...
சிட்டாய்த் திரிந்து, சிரித்து மகிழ்ந்த நாட்கள் என 
சுட்டுகிறது என் கைவிரல் அவற்றை!
சுமைகள் இவை, சுவைகள் இவை என
சூட்சமமாய்க் காலம் காட்டி எதிர் நிற்க 
நினைவு கூர்ந்து நகைக்கிறேன் - ஒரு கணம் 
நில்லாமல் ஓடிய அந்நாட்களை!!!
அதெல்லாம் ஒரு காலம் - என்று
அகத்தால் உரைக்க இதோ, என் முன்னரும்
அரியவகை அனுபவங்கள் அணிவகுப்பில்!!!
ஆழ்ந்த பெருமூச்சுடன் ............
ஒட்டிப் பார்க்க முயல்கிறேன் 
ஓட்டம் பிடித்த "அந்த என் நாட்களை" !!!