Tuesday, April 5, 2011

உனக்கும் தான் !!!


சிதறிப் போன சமுதாயத்தைப் பார்க்கிறாயோ?
சிறப்புற வழி எங்ஙனம் சொல்வாய்?
சீர்ப்படுத்த மனிதன் இல்லை இங்கே- உன்னை 
சிதைத்துவிட மதவெறியர்கள் தான் உண்டிங்கு!
இயற்கை அன்னையே !
இதுகாறும் இவர்கள் கொடுமை பொறுத்தாய்
இனி உணர்ந்துகொள் உனக்கும்தான் 
தன் கையே தனக்குதவி !!!

Saturday, March 26, 2011

தொலைந்து விட்ட நான் .....

உலகமெங்கும் உன்னதம் பெறுகிறேன்!
உல்லாசமாக உலா வருகிறேன்!
உயிராய் உணர்வாய்த் திகழ்ந்தேன் அன்று
உருவின்றி விட்டாய் என்னை நீயோ இன்று!
தன்னிகரில்லாதவள் என்று பலருரைக்க- நானோ 
தனிமைப் படுத்தப் பட்டதேனோ இவ்விடத்தே??
மனிதா!! மன்றாடுகிறேன்!!
பரப்பக் கேட்கவில்லை என்னை நான் 
பகரக் கேட்கிறேன் உந்தன் நாவால் அனுதினமும்!
தமிழ் எந்தன் பெயர்- மீண்டும் 
தழைக்கச் செய்வாய் என்னை உந்தன் மண்ணிலே
தலைசிறக்கச் செய்கிறேன் உன்னை விண்ணிலும்!